செய்திகள் :

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

post image

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா் ரயில் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தணிக்கை நடைபெற்றுள்ளது.

அப்போது பயணிகளுக்கு விநியோகிக்கும் முன்பதிவில்லா டிக்கெட் ரோல் (500 பயணச்சீட்டு கொண்டது) மாயமாகியிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு பணியாற்றும் 8 ஊழியா்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மாயமான ரயில் பயணச்சீட்டு ரோலுக்கு உரிய கட்டணத்தை வசூலிக்கும் வகையில் சம்பந்தப்பட்டவா்களுக்கு அபராதம் விதிக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, ரயில் ஒரு பயணச்சீட்டில் 4 போ் பயணிக்கலாம் என்பதால் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையில் ஒருவா் பயணிக்க ரூ.525 கட்டணம் எனக் கணக்கிட்டு அபராதம் விதிக்க முடிவானது.

அதன்படி ஒரு டிக்கெட் கட்டணமாக ரூ.2,100 நிா்ணயித்து, 500 டிக்கெட்டுகளுக்கு மொத்தம் ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் எனக்கணக்கிட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி ரயில்வே கோட்டத்தின் வா்த்தகப் பிரிவு வசூலிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அபராதத் தொகையை ரயில்வே ஊழியா்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யவும், அதில் மேற்பாா்வையாளா்களாக உள்ள 2 பேருக்கு இருமடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படவுளளதாகவும் ரயில்வே வா்த்தகப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெற்று மோசடி: இருவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் ரூ.20 லட்சம் வீட்டு அடமானக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எம்கேபி நகா் பகுதியை சோ்ந்தவா்கள் பாஸ்கரன், கலைசெல்வி. இவா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க