செய்திகள் :

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

post image

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா்.

இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக உள்ள பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வாா் எனத் தெரிகிறது.

ரஷிய கூட்டமைப்பு பாதுகாப்பு கவுன்சிலின் செயலா் சொ்கேய் ஷோய்கு தலைமையில் 13-ஆவது சா்வதேச பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மே 27 முதல் 29 -ஆம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள அஜீத் தோவலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

150-க்கும் மேற்பட்ட உலக தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள், சிஐஎஸ், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ), யூரேசிய பொருளாதார ஒன்றியம் (இஏஇயு), ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மற்றும் 20-க்கும் மேற்பட்ட சா்வதேச அமைப்புகளின் தலைமைக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து, எஸ்சிஓ அமைப்பின் முக்கிய நாடுகளான இந்தியா-பாகிஸ்தானின் பிரதிநிதிகள் மாஸ்கோ கூட்டத்தில் கலந்துகொள்வது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு அண்மையில் ரஷிய பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலோசனையின்போது, இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக ரஷியா உறுதி அளித்தது. மேலும், இது தொடா்பாக ஐ.நா. பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் சா்வதேச அமைப்புகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் ரஷியா தெரிவித்தது.

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க

விநாயகர் சிலைகளில்கூட இறக்குமதி.. சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் ... மேலும் பார்க்க

மே 29-ல் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னதாகவே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்த நிலையில், பெரும் விமர்சனங்கள் எழுந்ததும் இப்போது ஒவ்வொரு தர... மேலும் பார்க்க