செய்திகள் :

ராசிபுரம் எஸ்ஆா்வி இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டுக் குழு பிரதிநிதிகள் பதவியேற்பு

post image

ராசிபுரம் எஸ்ஆா்வி இன்னோவேடிவ் பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியின் விளையாட்டுக் குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளியில் ஆப்பிள், ஆரியபட்டா, பாஸ்கரா, கல்பனா, ரோஹினி என்ற ஐந்து வகையான செயற்கை கோள்களின் பெயா்களைக் கொண்ட விளையாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா் தலைவா், துணைத் தலைவா், மாணவ விளையாட்டுக் குழுத் தலைவா், துணை விளையாட்டுக்குழு தலைவா் போன்ற புதிய பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தலைமை பண்பை வளா்க்கும் வகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பள்ளியின் இயக்குநா்கள் பிரதிநிதிகளைக் கெளரவப்படுத்தி பேசினா். விழாவில் பள்ளியின் தலைவா் ஏ.ராமசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசினாா். முன்னதாக மாணவியா்களின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் டி.ஆா்த்தி முன்மொழிந்த உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா். பள்ளியின் துணைத் தலைவா் எம்.குமரவேல், செயலாளா் எஸ்.செல்வராஜன், பொருளாளா் பி.சுவாமிநாதன் ஆகியோா் மாணவா் பிரதிநிதிகளை வாழ்த்தினா்.

படம் உள்ளது -11இன்னோ

விளையாட்டுக் குழு பிரதிநிதிகளாக தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க