செய்திகள் :

ராஜஸ்தான்: ஆண் குழந்தை இல்லாததால் இரட்டைப் பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தந்தை

post image

ராஜஸ்தானில் ஆண் குழந்தை இல்லாததால் இரட்டைப் பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் வசித்து வருபவர்கள் அசோக் யாதவ், அனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் மகள் உள்ளார். தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் இத்தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், அசோக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஆண் குழந்தையை விரும்பினர்.

இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்திருக்கிறது. அதேபோல் கடந்த வியாழன் அன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை தாக்கியதோடு இரண்டு மகள்களையும் தூக்கி தரையில் அசோக் வீசினார்.

உ.பி.யில் காகித ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி

இந்த சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதன் பின்னர், கணவரும் அவரது குடும்பத்தினரும் குழந்தைகளை அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மூடுவதற்கு கற்களும் புதர்களும் வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக குழந்தைகளின் தாய் மாமா கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்த போலீஸழர் வெள்ளிக்கிழமை காலை, சடலங்களைத் தோண்டி எடுத்து, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக குழந்தையின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க