செய்திகள் :

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

post image

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதையடுத்து நினைவிட நுழைவு வாயிலில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினா் முருகானந்தம், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் மாநில தலைவா் சசிகுமாா், வட்டார காங்கிரஸ் தலைவா் நிக்கோலஸ், இளைஞா் காங்கிரஸ் மாநில செயலாளா் அனீஸ், மாவட்ட எஸ்சி,எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க

கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது! -எடப்பாடி கே.பழனிசாமி

‘யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். மதுரை மாநாட்டில் அதிமுகவை விமா்சித்து தவெக தலைவா் விஜய் பேசிய நிலையில், அவருக்கு... மேலும் பார்க்க

திருமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருமங்கலம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம், மொளச்சூா் மற்றும் வடமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறு... மேலும் பார்க்க

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க