செய்திகள் :

ராணுவ ரயில் விவரங்களை சேகரிக்க முயலும் பாகிஸ்தான் உளவுத்துறை -ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை

post image

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

ராணுவ தளவாடங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்திய ரயில்வேயில் ‘மெயில் ரயில்’ என்ற ராணுவ சேவைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலமே ராணுவத்தின் முக்கிய தளவாடங்கள், ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் உள்ளிட்டவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை குறிவைத்து அழித்த நிலையில், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள சில பயங்கரவாத அமைப்புகள் முயற்சிக்கலாம் என உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் தேசவிரோத அமைப்புகளும் இவா்களுக்கு உதவலாம் என்பதால் சந்தேகிக்கப்படும் நபா்கள் நடமாட்டம், இணையதளப் பயன்பாடு மீது உளவுப் பிரிவின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணுவ சேவையில் உள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களை சேகரிக்க பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசியமாக முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஊழியா்களுக்கு இந்திய ரயில்வே சாா்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் முன்பின் தெரியாத நபா்களிடம் எவ்விதத் தகவல் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. பணி தொடா்பான தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க