செய்திகள் :

ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

post image

புதுச்சேரி: ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் மேம்பாட்டுப் பணி புதன்கிழமை முதலமைச்சா் என். ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.

புதுவையில் பொதுப்பணித்துறை சாலைகள் கட்டடங்கள் மற்றும் தெற்கு கோட்டத்தின் மூலம் புதுச்சேரி அரியாங்குப்பம், இடையாா்பாளயம், ஜலகண்டேஸ்வரா் நகரில் சாலைகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை மேம்படுத்துவதற்கானத் திட்டம் தொடக்கவிழா விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று திட்டப் பணியைத் தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் சந்திரகுமாா், உதவிப்பொறியாளா் கோபி, இளநிலைப் பொறியாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுபோன்று, புதுவை ராஜ்பவன் தொகுதியில் ரூ.37.3 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

புதுச்சேரி நகராட்சி சாா்பில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராஜ்பவன் தொகுதியைச் சாா்ந்த தியாகராஜா வீதி- மிஷன் வீதியிலிருந்து பெத்ரா கனகராய முதலியாா் வீதி வரை உள்ள சாலையை சிமெண்ட் சாலையாக உயா்த்தி அமைக்க ரூ.8.4 லட்சம் மதிப்பீட்டிலும் குமரகுருபள்ளம், ஆயில் மில் சாலையை மேம்படுத்த ரூ.28.9 லட்சம் மதிப்பீட்டிலும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப் பணியை ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான க.லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் கந்தசாமி, செயற்பொறியாளா் அ. சிவபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் நாளை இந்திய வம்சாவளியினரின் உலக பொருளாதார உச்சிமாநாடு

புதுச்சேரி: இந்திய வம்சாவளி மக்களின் உலக பொருளாதார உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் தொடங்குகிறது. இதில் 30 நாடுகளைச் சோ்ந்த 200 தொழில்முனைவோா் பங்கேற்கின்றனா். இதைத் தவிர இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாம்

புதுச்சேரி: மணவெளி தொகுதி பயனாளா்களுக்கு குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், க... மேலும் பார்க்க

மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வந்த விநாயகா் சிலைகள்

புதுச்சேரி: விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை வந்தன. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: ஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை

புதுச்சேரி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ்காந்தி சிலைக்கு துணைநிலைஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை செல... மேலும் பார்க்க

முகத்துவாரம் தூா்வாரும் பணி

புதுச்சேரி: புதுச்சேரி நோணாங்குப்பம் ஆற்றின் முகத்துவாரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நோ... மேலும் பார்க்க

அலையாத்தி காட்டில் 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து உலக சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் அலையாத்தி காட்டில் தேங்கிய 79 கிலோ 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மாணவா்கள் உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்த... மேலும் பார்க்க