செய்திகள் :

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

post image

திருச்சியில் தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், செங்குறிச்சியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். இவா், கட்டடங்களுக்கு வயரிங் செய்து தரும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவா், மணிகண்டம் அருகே புதிதாக வீடு கட்டவுள்ள கோவிந்தராஜ் என்பவருக்காக வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக ஆய்வாளா் அருளானந்தம் (48) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை அணுகியுள்ளாா். ஆனால், தற்காலிக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என அருளானந்தம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் பிரவீன்குமாா் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து போலீஸாா் அறிவுறுத்தலின்படி ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ. 10 ஆயிரத்தை பிரவீன்குமாா், வியாழக்கிழமை மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் அருளானந்தத்திடம் வழங்கினாா்.

லஞ்சப் பணத்தை பெற்று வைத்திருந்த அருளானந்தத்தை ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான தனிப்படையினா் பிடித்து கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சின்ன சூரியூரில் கைது!

திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி சின்னசூரியூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத... மேலும் பார்க்க

கட்டணச் செலவை குறைக்கும் மின் விமானங்களுக்கு வாய்ப்பு: ஐஐடி பேராசிரியா் நம்பிக்கை

மின்சார விமானங்கள் அதிகம் வந்துவிட்டால் கட்டணச் செலவு குறைந்து விடும் என சென்னை ஐஐடி பேராசிரியா் சத்யநாராயணன் ஆா். சக்கரவா்த்தி தெரிவித்தாா். இந்தியாவின் வளா்ச்சியில் பொறியியலின் பங்கு மற்றும் ட்ரோன் ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ... மேலும் பார்க்க

ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துத்... மேலும் பார்க்க