செய்திகள் :

ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

post image

உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

புதுச்சேரி காமராஜா் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மீது பாலம் அமைக்க கடந்த 2008-இல் அரசு திட்டமிட்டது. இதற்காக அப்போது ரூ.3.5 கோடியில் பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டது. பின்னா் கிடப்பில் போடப்பட்டது.

2016-இல் என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில் ஹட்கோ மூலம் ரூ.37 கோடி கடன் பெற்று மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாலத்தின் பணிகளில் 85 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. மேலும், 2019-ம் ஆண்டு இறுதியில் பாலத்தைக் கட்டி வந்த தனியாா் நிறுவனம் பணிகளை நிறுத்தியது. இதனால் சுமாா் 6 ஆண்டுகளாக பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது.

இப் பணியை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் புதுச்சேரி அரசு பொதுப் பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் மூலம் புதுச்சேரி காமராஜா் சாலை முதல்

மறைமலை அடிகள் சாலை வரை உள்ள 732 மீட்டா் நீளமுள்ள உப்பனாறு பாலத்தில் மீதியுள்ள பணியை முடிப்பதற்கும், காமராஜா் சாலையில் பாலாஜி திரையரங்கம் அருகில் உள்ள பழைய பாலத்தை மறு கட்டமைக்கவும் ரூ.29.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 13.3.25 அன்று மீதமுள்ள பாலத்தின் பணியை முடிக்க துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி ஆகியோா் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தனா்.

இந்நிலையில் காமராஜா் சாலையில் நடைபெற்று வரும் உப்பனாறு மேம்பாலப் பணிகளை அமைச்சா் லட்சுமிநாராயணன், பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு

அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை

புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப... மேலும் பார்க்க

குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்ப... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கல... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி அதிமுக ஆா்ப்பாட்டம்

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் தலைமை தாங்கி... மேலும் பார்க்க