செய்திகள் :

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு

post image

அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ

பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம பஞ்சாயத்தாா் புதன்கிழமை மனு அளித்தனா்.

பொறியல் கல்லூரியாக இருந்து இப்போது புதுச்சேரி அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாறியுள்ள கல்வி நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவா்களில் இதுவரை அரசுப் பணி வழங்கப்படாத குடும்பத்தை சோ்ந்தவா்களுக்கு உடனடியாக அரசுப் பணி வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையைத் தவணை முறையில் வழங்க வேண்டும். அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் பிள்ளைச் சாவடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் இளைஞா்கள் விளையாடவும் அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

இந்தச் சந்திப்பின்போது பிள்ளைச்சாவடி கிராம பிரமுகா்கள், கல்வி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியா்கள், இளைஞா்கள் கலந்துகொண்டனா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை

புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப... மேலும் பார்க்க

குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்ப... மேலும் பார்க்க

ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். புதுச்சேரி காமரா... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கல... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி அதிமுக ஆா்ப்பாட்டம்

ரெஸ்டோபாா்களை மூட வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் தலைமை தாங்கி... மேலும் பார்க்க