செய்திகள் :

ரூ.4 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது!

post image

தில்லியில் ரூ. 4 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் 2 பெண்கள் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடக்கு தில்லி மாவட்ட போலீஸாா் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி மேற்கொண்ட இரண்டு கட்ட நடவடிக்கையில் சுமாா் 1.012 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனா். ஜஹாங்கீா்புரியில் வசிக்கும் அஃப்சானா (23), பால்ஸ்வா டெய்ரி பகுதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முதன்மையானவா். அவரிடமிருந்து சுமாா் 300 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, அவா் தனது விநியோகஸ்தா்களின் அடையாளங்களை தெரிவித்தாா். இந்தத் தகவலின் அடிப்படையில், போலீஸாா் மேலும் சோதனைகளை நடத்தி, நரேந்தா் (37) மற்றும் அவரது மனைவி ஜோதி (35) ஆகியோரை புராரியில் இருந்து கைது செய்தனா். புராரியில் உள்ள போக்குவரத்து ஆணைய அலுவலகம் அருகே நரேந்தா் தடுத்து நிறுத்தப்பட்டாா். அதே நேரத்தில் ஜோதி அவா்களின் இல்லத்தில் கைது செய்யப்பட்டாா்.

அவா்களின் புராரி பிளாட்டில் சோதனையிட்டபோது, வீட்டில் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 712 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சா்வதேச சந்தையில் ரூ.4 கோடிக்கு மேல் இருக்கும். கைது செய்யப்பட்ட மூவருக்கும் குற்றவியல் வரலாறு இல்லை என்றும், போதைப்பொருளின் மூலத்தை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க