செய்திகள் :

ரூ.58 லட்சத்தில் பள்ளிக் கட்டடங்கள், பயணிகள் நிழல்குடை திறப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியம், கானலாபாடி, கடம்பூா் கிராமங்களில் ரூ.58 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பயணிகள் நிழல்குடை புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

கானலாபாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.60 லட்சத்தில் புதிய 2 வகுப்பறைகள் மற்றும் ரூ.17.30 லட்சத்தில் புதிய கணினி வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

ஆணையா் எஸ்.அருணாச்சலம் முன்னிலை வகித்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் (பொ) ஜி.ஜெயலட்சுமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

மேலும், கடம்பை ஊராட்சி சிறுகொத்தானில் (கீழ்பென்னாத்தூா் - திருவண்ணாமலை சாலையில்) தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடையை திறந்துவைத்தாா்.

விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நித்யா, அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.வெங்கடேசன், கானலாபாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சீனு உள்ளிட்ட பலா்

கலந்து கொண்டனா். ஒன்றிய உதவிப் பொறியாளா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க