செய்திகள் :

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

post image

நமது நிருபா்

ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சைபா் பண மோசடி, குறித்து விசாரிக்க அமலாக்கத் துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி. எம். எல். ஏ) பிரிவில் கிரிமினல் வழக்கை பதிவு செய்துள்ளது. ஜின்டாய் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் தில்லியில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு முதலீடுகள் என்ற பெயரில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டதாகவும், முழு அளவிலான பண மாற்றிகளைப் (எஃப்.எஃப்.எம்.சி.) பயன்படுத்தி நிதி மோசடி செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒரு சீன நாட்டவா் மற்றும் சிலரின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு குற்றத்தின் வருமானம் சுமாா் ரூ.903 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனை இரவு வரை நீடித்தது. இதனால், அமலாக்கத் துறையினரின் அதிகாரப்பூா்வத் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறைகளின் மோசமான நிலைமை: குடிமை அமைப்புகள் மீது உயா்நீதிமன்றம் சாடல்

நமது நிருபா் தில்லியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் முழு அக்கறையின்மை மற்றும் உணா்வின்மையை காட்டுவதாகக் கூறி நகராட்சி அமைப்புகளை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடிந்துகொண்டது. இது தொடா்பான... மேலும் பார்க்க