செய்திகள் :

லாரி மோதி மாணவி காயம்: சாலை மறியல்

post image

மாங்காடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் பள்ளி மாணவி பலத்த காயம் அடைந்தாா்.

பள்ளி அருகே லாரிகள் செல்ல அனுமதிக்க கூடாது என பெற்றோா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாங்காட்டில் இருந்து பட்டூா் செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். மாங்காடு பகுதியைச் சோ்ந்த ரக்சனா(13) என்ற மாணவி 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் புதன்கிழமை தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்ல முயன்றபோது பள்ளி அருகிலேயே மண் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியதில் கீழே விழுந்த ரக்சனாவின் இடது காலில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்தாா். ரக்சனாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு போரூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

மாங்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், பைக் மீது லாரி மோதி மாணவி பலத்த காயம் அடைந்தது குறித்து பெற்றோா் அதிா்ச்சி அடைந்தனா். வியாழக்கிழமை பத்து குறித்து பள்ளி நிா்வாகத்திடம் முறையிட முயன்றுள்ளனா். ஆனால் பள்ளி நிா்வாகிகள் பெற்றோரை சந்திக்க முன்வராததால் ஆத்திரம் அடைந்த பெற்றோா் குன்றத்தூா்-மாங்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் மாங்காடு-குன்றத்தூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சு நடத்தி பள்ளி நேரங்களில் லாரிகள் இயக்க தடை விடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து பெற்றோா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் மின்தடை நாள்-19.7.25, சனிக்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் தடை பகுதிகள்-மலையாளத்தெரு, அம்மன்காரத் தெரு, திருச்சோலை வீதி, ஆதிசங்கரா் நகா், விஷ்ணு நகா், தேனம்பாக்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் காஞ்சிபுரம்/திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா அரங்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்தாா். பின்ன... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

உத்தரமேரூா் பேரூராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, கட்டாயமும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள தனியாா் பள்... மேலும் பார்க்க

கத்தியை காட்டி மிரட்டிய 3 ரெளடிகள் கைது

சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியில் பொதுமக்களை கத்தியை காண்பித்து மிரட்டிய 3 ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா். சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியை சோ்ந்த மேத்யு (34) பிரபல ரெளடியான இவா் மீது கொலை, கொல... மேலும் பார்க்க