செய்திகள் :

லெபனான் - சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம்!

post image

லெபனான் மற்றும் சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தானது.

லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சௌதி அரேபியா நாட்டில் நேற்று (மார்ச் 27) இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்குபெற்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லையில் நிலவி வந்த பதற்றமானது தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 54 ஆண்டுகள் சிரியாவை ஆண்டு வந்த ஆசாத் குடும்பம் வெளியேற்றப்பட்டு இடைக்கால அரசு அமைந்ததிலிருந்து, லெபனானுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்தது. இரு நாட்டு எல்லைகளிலும் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் அசாத் படைகளுடன் இணைந்து சிரியாவின் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 14 ஆண்டுகள் நீடித்த இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இம்மாத துவக்கத்தில் சிரியா மற்றும் லெபனான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த சில வாரங்களாக இருநாட்டு அதிகாரிகளும் சுமார் 400 கி.மீ. எல்லையிலிருந்த கடத்தல் வழிகளைக் கண்டறிந்து முடக்கி வந்தனர்.

இந்நிலையில், இரு நாடுகளும் தங்களது எல்லையை வரையறுக்கவும் பல்வேறு துறைகளில் சட்டப்பூர்வமான சிறப்பு ஆணையங்களை உருவாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்களது எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டாகினால் ஒருங்கிணைந்த வழிமுறைகளை செயல்படுத்த முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், இரு நாடுகளின் பகுதியில் பாதுகாப்பை நிலைநாட்ட சௌதி அரேபியா துணை நின்று ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 26 லெபனான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கெல் மெனாஸாவின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிரியா அமைச்சர் முர்ஹாஃப் அபு கஸ்ரா சௌதி அரேபியாவின் ஜெட்டாஹ்வுக்கு பயணம் செய்தார். அங்கு, சௌதி பாதுகாப்புத் துறை அமைச்சர் காலித் பின் சல்மான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.

இதையும் படிக்க:பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்... 43 பேரின் கதி என்ன?

வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பக... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!

மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 35 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானிலிருந்து அப்கான் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை... மேலும் பார்க்க

மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மலேசியா நாட்டில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப் பெரிய நகரமான கோலாலம்பூரின் புத்ரா பகுதியில் இன்று (ஏப் 1) காலை 8.10... மேலும் பார்க்க

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.இணைதளவுலகில் எங்கும் ‘ஜிப்லி’மயமாக அலைவீசிக் கொண்டிருக்கிறது. சின்னச்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும... மேலும் பார்க்க