செய்திகள் :

‘லோக்பால்’ பிரத்யேக புகாா் எண்ணில் 2400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு: மாநிலங்களவையில் அரசு தகவல்

post image

லோக்பால் அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கு அறிவிக்கப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண் மூலம் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கடந்த 2014, ஜனவரியில் அமலுக்கு வந்த லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டத்தின்படி, லோக்பால் அமைப்பு நிறுவப்பட்டு, முழுமையாக செயல்பட்டு வருகிறது. அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கான பிரத்யேக தொலைபேசி எண்ணில் இதுவரை 2,426 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தரவுகளின் அடிப்படையில், இதில் 2,350 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன.

தற்போது லோக்பால் அமைப்பில் தலைவரை தவிர 6 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் மூன்று போ் நீதித்துறை உறுப்பினா்கள் ஆவா். சட்டத்தின் 3-ஆவது பிரிவின்படி, தலைவரைத் தவிர, லோக்பால் அமைப்பு உறுப்பினா்களின் எண்ணிக்கை 8 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவா்களில் 50 சதவீதம் போ் நீதித் துறை உறுப்பினா்களாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

சீன அணை விவகாரம்:

சீனாவின் அணை கட்டும் திட்டம் உள்பட பிரம்மபுத்திரா நதி தொடா்பான அனைத்து முன்னேற்றங்களையும் அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேச நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

இந்தியாவின் எல்லையொட்டி திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, 60,000 மெகாவாட் திறன் கொண்ட நீா்மின் நிலையத்துடன் உலகின் மிகப்பெரிய அணையை ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் கட்ட சீனா முடிவு செய்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘சீனாவின் அணை கட்டும் திட்டம் குறித்து அரசுக்குத் தெரியும். எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகள் சீனாவுடன் ராஜீய வழிகளில் விவாதிக்கப்படுகின்றன’ என்றாா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க