செய்திகள் :

வக்ஃப் சட்டம் குறித்து வதந்திகளைப் பரப்புகிறது காங்கிரஸ்: மத்திய அமைச்சர்

post image

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் பூபேந்திரா யாதவ் குற்றம் சாட்டினார்.

தில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் 2025, முற்போக்கான பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சட்டத்தின் காரணமாக இஸ்லாமியர்களின் உரிமைகள் முடிவுக்கு வரும் என்று காங்கிரஸ் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இந்தச் சட்டம் திருத்தப்பட்டது இது முதல் முறை அல்ல என்றும் அவர் கூறினார்.

வக்ஃப் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை, மேலாண்மை போன்ற சில பிரச்னைகள் 2013 கடைசி திருத்தத்தில் கவனிக்கப்படாமல் இருந்தன, ஆனால் தற்போது வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-ல் கவனிக்கப்பட்டுள்ளன அதேசமயம் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

புது தில்லி; நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களை தடை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்க... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட... மேலும் பார்க்க

எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல... மேலும் பார்க்க

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க