செய்திகள் :

வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?

post image

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது.  

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 பிஜிஐ என்ற போர் விமானம், இன்று (ஜூலை 21) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

பள்ளியில் விழுந்த போர் விமானம்
பள்ளியில் விழுந்த போர் விமானம்

தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது பிற்பகல் 2.03 மணிக்கு அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

விமானம் உடனடியாக தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் பற்றிய தீயைக் கட்டுக்குள்கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் விழுந்த போர் விமானம்
பள்ளியில் விழுந்த போர் விமானம்

பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகி இருப்பதாகவும் 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி... 3 பேர் படுகாயம் - சிவகாசியில் தொடரும் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவு... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுகள் கோமாவில் வாழ்வு; செளதி அரேபியா இளவரசர் அல் வகீத் காலமானார்..

'ஸ்லீப்பிங் பிரின்ஸ்' என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமாகியிருக்கிறார். கடந்த இருபது வருடங்களாக அவர் கோமா நிலையில் இருந்தார். ஒரு கார் விபத்தினால்தான் அவர் கோமா நிலைக்க... மேலும் பார்க்க

நீலகிரி: மின் கம்பத்தின் கீழ் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் சிறுத்தை; வனத்துறை சொல்வது என்ன?

சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலகிரி வனக்கோட்டத்தில் மேலும் ஒரு பெண் சிறுத்தையின் பரிதாப இழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்... மேலும் பார்க்க

பள்ளி சைக்கிள் ஷெட் மீது விழுந்த காலணி; எடுக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி.. கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வலியபாடத்தைச் சேர்ந்த மனு என்பவரது மகன் மிதுன்(13). தேவலக்கரை பகுதியில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். நேற்று பள்ளிக்குச் சென்றபோது மாணவ... மேலும் பார்க்க

விருதுநகர்: செவல்பட்டி பட்டாசு ஆலை விபத்து; கழிவு வெடிகள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு வெம்பக்கோட்டை அருகில் உள்ள செவல்பட்டியில் சரவணா பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.மாவட்ட வருவாய் அலுவ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”கனவாக இருக்கக் கூடாதா..?”- கதறித் துடிக்கும் பெற்றோர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 கு... மேலும் பார்க்க