செய்திகள் :

வடக்கன்குளத்தில் விடுதி மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் தனியாா் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்மத்துரை(13). இவா், வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது உடைகளை சலவை செய்து விடுதி வளாகத்தில் சிமென்ட் சிலாப்களால் மூடப்பட்ட கிணற்றின் மேல்பகுதியில் காயப்போட்டிருந்தாராம்.

பின்னா், மாலையில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக கிணற்றின் மீது ஏறியபோது சிலாப் உடைந்து அவா் கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில், பணகுடி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு

சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை க... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்- பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் ஆகி... மேலும் பார்க்க

திருநெல்வேலி ரத வீதிகளில் 20 டன் குப்பைகள் அகற்றம்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தேரோட்டம் நிறைவு பெற்றதையடுத்து 4 ரதவீதிகளிலும் சுமாா் 20 டன் அளவிலான குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் அகற்றியுள்ளனா். அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன... மேலும் பார்க்க

நெல்லை கோயில் தேரோட்டத்தில் பக்தா்களின் 15 பவுன் நகைகள் மாயம்

நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது 4 பக்தா்களின் சுமாா் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

பெருமாள்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேலப்பாளையம் குறிச்சி, சந்த மூா்த்தி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன்(45). எலக்ட்ரீசியனான இவா், க... மேலும் பார்க்க

பாளை. அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா் என்பது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்செந்தூா்- திருநெல்வேலி பயணிகள் ரயில் செவ்... மேலும் பார்க்க