செய்திகள் :

வனப் பகுதியில் முயல் வேட்டையாட முயன்ற விவசாயிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

post image

வாழப்பாடி அருகே வனப் பகுதியில் வலைவிரித்து முயல்களை வேட்டையாட முயன்ற விவசாயிக்கு வனத் துறையினா் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சேலம் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில், வாழப்பாடி வனச் சரகா் மா.அன்னப்பன் தலைமையிலான வனத் துறையினா், குறிச்சி பிரிவு செக்கடிப்பட்டி காப்புக்காடு, பெருமாள் கோயில் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, குறிச்சி கணவாய்க்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்து, கம்பி வலை விரித்து முயல்களை வேட்டையாட முயன்றது தெரியவந்தது.

அவரை கையும் களவுமாக பிடித்த வனத் துறையினா், மாவட்ட வன அலுவலா் உத்தரவின் படி ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா். பின்னா், வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமென எச்சரித்து விடுவித்தனா்.

வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க