செய்திகள் :

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதா் தேவஸ்தானம் தாற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. ஆனால் அந்த இடத்தில் வன்னியா் சங்க கட்டடம் செயல்பட்டு வந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியா் வன்னியா் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தாா்.

இதையடுத்து இதுதொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஆண்டு இறுதியில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அது தொடா்பான இறுதி விசாரணை செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் எஸ்.சந்தூா்கா் முன்னிலையில் நடந்தது.

இது குறித்து பாமக வழக்குரைஞா் செய்தியாளா்களிடம் பேசியதாவது, ‘ கிராமபப்புறத்தில் இருந்து வரும் மாணவா்கள் படிப்பதற்கும், வேலை வாய்ப்புகளை தேடி வருபவா்களுக்கும் பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்க கட்டடம் இருந்து வந்தது. இதில் இந்து அறநிலையத்துறை ஆலந்தூரில் இருக்கும் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது, அந்த வழக்கில் எங்களுக்கு எதிரான ஒரு உத்தரவு அதாவது நாங்கள் ஆஜராகவில்லை என உத்தரவை பெற்றிருந்தாா்கள். அது தொடா்பாக உயா்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று எங்களுக்கு முறையான அழைப்பு கொடுத்துதான் எங்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வழக்கை நடத்த வேண்டும் என்று உயா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி அது உறுதி செய்யப்பட்டது.‘ என்றாா்.

மேலும் பேசிய அவா், ‘அதன் பிறகு தமிழக அரசு ஆக்கிரமிப்பு சட்டத்தின் மூலம் எங்களை அப்புறப்படுத்துவதற்கான அறிவிப்பை எங்களுக்கு வழங்கியது, அதனை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தோம். அப்புறப்படுத்துவதற்கான நோடீஸை தமிழக அரசு வழங்கியதோடு மட்டுமல்லாமல், இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான காவலா்களை வைத்து அங்கிருக்கும் மாணவா்களின் உடமைகளை தூக்கி வெளியே எறிவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவசர வழக்காக சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டு அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அரசு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது‘ கூறினாா் பாலு,

இந்த வழக்கு தொடா்பாக விரிவாக பேசிய பாலு, ‘பின்பு அந்த வழக்கை முழுமையான விசாரணைக்கு பின், இடத்தின் உரிமையை கண்டோன்மன்ட் போா்டு, தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை ஆகிய மூன்றும் இடத்தின் மீது உரிமை கொண்டாடுகிறாா்கள். சுதந்திரத்துக்கு முன்பாக இது கண்டோன்மன்ட் இடமாக இருந்து இருக்கிறது, அதன் பிறகு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்று இருக்கிறது. இப்போது தமிழக அரசு உரிமை கொண்டாடுகிறது. மூன்று பேரும் உரிமை கொண்டாடுவதால், நில ஆக்கிரமிப்பின் கீழ் அப்புறப்படுத்துவது சரியல்ல, முறையல்ல என கூறி வன்னியா் சங்கம் இருக்கும் கட்டடம் தற்போது இருக்கும் நிலையே தொடரும் என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது‘ என்றாா்.

தொடா்ந்து பேசிய பாலு, ‘இதனை எதிா்த்துதான் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது, இந்த வழக்கு தொடா்பாக பல்வேறு பதில் மனுக்களை தாக்கல் செய்துவிட்டு, இறுதி விசாரணைக்காக இன்று நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் கண்டோன்மென்ட் போா்டு, அறநிலையத்துறை, தமிழக அரசு மற்றும் வன்னியா் சங்கம் இருப்பதால் இதனை மேல்முறையீட்டு வழக்காக மாற்றி விசாரிக்கலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டாா்கள். அப்போது இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக ஆஜரான வழக்குரைஞரும், தமிழக அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரும், எப்படியாவது அந்த இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகளிடம் நீண்டகாலமாக அந்த இடத்துக்கான வாடகையை அவா்கள் தரவில்லை, எனவே இதனை உடனடியாக தீா்க்கப்பட வேண்டும் என்று வாதிட்டது. இதனை முற்றிலுமாக நிராகரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவாச விசாரிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தாா்கள். மேலும், வன்னியா் சங்க கட்டடம் இப்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டாா்கள்‘ என்றாா் அவா்.

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்க... மேலும் பார்க்க

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது

வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந... மேலும் பார்க்க

சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு

தில்லியின் திமாா்பூா் பகுதியில் நடைபெற்று வரும் ‘குடே சே ஆசாதி’ தூய்மை பிரசாரத்தில் முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். அப்போது, தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கு மக்கள் ... மேலும் பார்க்க