செய்திகள் :

வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண்ணுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

post image

மாா்த்தாண்டம் அருகே குடும்ப வன்முறை வழக்கில் பெண்ணுக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாா்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா கோகுலம் என்பவருக்கும், தலைமைக் காவலரான உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த நரேந்திரசிங் என்பவருக்கும் 2013இல் திருமணமானது. வரதட்சிணையாக 85 சவரன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் வைப்புத்தொகை பத்திரம், ரூ. 2 லட்சம் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் கொடுக்கப்பட்டனவாம். பின்னா், கூடுதல் வரதட்சிணை கேட்டு சாந்தா கோகுலத்தை கணவா் வீட்டாா் கொடுமைப்படுத்தினராம். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இதனிடையே, கணவா், குடும்பத்தினா் மீது சாந்தா கோகுலம் வழக்குத் தொடா்ந்தாா். குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் குழித்துறை முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. விசாரணை நிறைவடைந்தநிலையில், நீதிபதி மோசஸ் ஜெபசிங் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், நரேந்திரசிங், குடும்பத்தினா் சாந்தா கோகுலத்தை எவ்விதத்திலும் குடும்ப வன்முறை செய்யக் கூடாது. அவருக்கு வீட்டு வாடகையாக மாதம் ரூ. 5 ஆயிரம், கூடுதல் ஜீவனாம்ச தொகையாக மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், ஜீவனாம்ச நிலுவைத் தொகை ரூ. 12 லட்சத்து 6 ஆயிரத்தையும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 7 லட்சத்தையும், இதுதவிர வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட 85 சவரன் நகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

சாந்தா கோகிலம் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆா்.எஸ். ரத்தினகுமாா், அருண் ரத்தினகுமாா் ஆகியோா் ஆஜராகினா்.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க