செய்திகள் :

வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு

post image

வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்த மருத்துவரான சஞ்சய்க்கும் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மிதுளா நந்தினி குடும்பத்தினா் வரதட்சிணையாக 51 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம், வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் சஞ்சய்க்கு கொடுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, இருவரும் நாமக்கல்லில் வசித்து வந்துள்ளனா். அப்போது சஞ்சய் தனது படிப்புக்கு கூடுதலாக வரதட்சிணை வேண்டுமென மிதுளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மிதுளா திருப்பூா் கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். அந்தப் புகாா் குறித்து போலீஸாா் விசாரித்தபோது, இனிமேல் எந்தப் பிரச்னையும் செய்ய மாட்டேன் என காவல் நிலையத்தில் ஆஜராகி சஞ்சய் எழுதிக் கொடுத்துள்ளாா்.

அதன் பிறகு சஞ்சய், மிதுளாவுக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மிதுளா நந்தினி கொங்கு நகா் காவல் நிலையத்தில் மீண்டும் புகாா் கொடுத்துள்ளாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சஞ்சய், அவரது தந்தை அலெக்சாண்டா், தாய் இந்திரா உள்பட 9 போ் மீது வரதட்சிணை கொடுமை பிரிவின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஆகஸ்ட் 19இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநி... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 79ஆவது சுதந்திர தின விழா நாடு முழ... மேலும் பார்க்க

சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை: வெளியூா்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெய... மேலும் பார்க்க

கோரிக்கை மனு...

பல்லடத்தில் புதிய புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு, பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையா் அருளிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த 5, 6, 7 ஆகிய வாா்டுகளைச் சே... மேலும் பார்க்க