செய்திகள் :

வரி ஏய்ப்பு புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

post image

வரி ஏய்ப்பு புகாா் காரணமாக தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் ரசாயன நிறுவனத்தின் கிளை அலுவலகம், சென்னை தியாகராய நகா் கிரசண்ட் சாலையில் உள்ளது. மருந்து, உரம், வேதிப் பொருள்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன.

இந்த நிறுவனம் கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் வருமானவரித் துறை புலனாய்வு பிரிவினா் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தற்கான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். இந்தச் சோதனை நாடு முழுவதும் 25 இடங்களில் நடைபெற்ாகக் கூறப்பட்டது.

சென்னையிலும், சென்னை புகா் பகுதியிலும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, தியாகராய நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், வடபழனியில் உள்ள ஒரு ஆடிட்டா் வீடு, அபிராமபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகா் ஆகிய இடங்களில் சிலரது வீடுகள் உள்பட மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னா், கைப்பற்ற ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க