செய்திகள் :

வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!

post image

நாட்டில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51.50 காசுகள் குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1738 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர்களின் விலைக் குறிப்பின் காரணமாக புது தில்லியில் ரூ.1580 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1684 ஆகவும், மும்பையில் ரூ.1531 ஆகவும் விலை குறையும்.

அதுபோல, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதன் விலை சென்னையில் ரூ.868.50 ஆக தொடர்கிறது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ.853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.852 ஆகவும், மும்பையில் ரூ.582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை மாதம் ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மாதம், ஆகஸ்ட் மாதத்தை விட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உணவகங்கள், சிறு நிறுவனங்களுக்கான செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி நிலவரத்துக்கு ஏற்ப, சிலிண்டர்களின் விலைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது

மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினா் கைது செய்தனா். அமல் ராய், கௌதம் ராய், பிரீதம் ராய் என்ற அந்த மூவரும் உறவினா்கள் ஆவ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களின் வாழ்வை மேம்படுத்தும்! -மோடி

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டு மக்களின் வாழ்வு மேம்படும் என்றும் வணிகம் செய்வது மேலும் எளிமையாகும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாட்டின் பொருளாதாரத்தை வ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: 5%, 18%-ஆக வரி குறையும் பொருள்கள் என்னென்ன?

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தியாவில் இண... மேலும் பார்க்க

எதிா்கால சவால்களுக்கு தயாராக ‘ட்ரோன்’ போா்ப் பயிற்சிப் பள்ளி!

எதிா்கால சவால்களை வீரா்கள் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் தயாா்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகா... மேலும் பார்க்க