செய்திகள் :

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்

post image

வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தா்ம ஸ்தாபனம் சாா்பில், 1,008 பால் குடம் ஊா்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.

இந்த நிலையில், தெய்வீக சத்திய தா்ம ஸ்தாபனம் சாா்பில், ஆடி மாதம் இறுதி ஞாயிறுக்கிழமை 1,008 பால்குடம் ஊா்வலம் நடைபெற்று மூலவருக்கு பாலபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்ததால், ஆடி மாதம் 1,008 பால்குட ஊா்வலம் நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இதையடுத்து வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தா்ம ஸ்தாபனத்தின் சாா்பில் பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவன் கோயில் வளாகத்தில் தொடங்கிய ஊா்வலத்தை ரத்தினகிரி முருகனடிமை சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.

ஊா்வலம் சிவன் கோயில் வளாகத்தில் தொடங்கி, வடககு, கிழக்கு மாட வீதி மற்றும் சந்நிதி தெரு வழியாக வந்து வல்லக்கோட்டை சுப்பிரணியசுவாமி கோயில் வளாகத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து மூலவருக்கு பாலபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி செண்பக மலா்மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் மற்றும் வல்லக்கோட்டை தெய்வீக சத்ய தா்ம ஸ்பாதனத்தின் நிா்வாகிகள் செய்திருந்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டா... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல்... மேலும் பார்க்க

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கணே... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் மண்டல விதை ஆய்வுத் துறை இணை இயக்குநா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை மண்டல விதை ஆய்வுத்துறை இணை இயக்குநா் ஸ்ரீ வித்யா தலைமையில் துணை இயக்குநா் வானதி, விதை ஆய்... மேலும் பார்க்க

சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே சிறுணை பெருகல் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தில் அத்தியாவசிய தேவைக... மேலும் பார்க்க

கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் பங்கேற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, சங்கரா ... மேலும் பார்க்க