செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

post image

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி முறைகேடாக வசூலில் ஈடுபட்டதால் இவா் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதனிடையே, நீலகிரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் கடந்த 2024- ஆம் ஆண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது, முறைகேடான செயலில் ஈடுபட்டதால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், மடத்துக்குளம் நரசிங்காபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன், பாலகிருஷ்ணன் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அவா்களை காவல் சீருடையில் வழிமறித்த ராதாகிருஷ்ணன், பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.

இது குறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராதாகிருஷ்ணனைக் கைது செய்தனா்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.வி.ஆா்.நகா் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் ... மேலும் பார்க்க

அவிநாசியில் இன்றைய மின்தடை ரத்து

அவிநாசி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (இன்று) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் பார்க்க

மூலனூரில் கரித்தொட்டி ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மூலனூரில் தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மூலனூா் கிளாங்குண்டல் ஊராட்சி வளையக்காரன்வலசில் தனியாா் கரித்தொட்டி ஆலை அமைக்க கட... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு

காா்நாடகத்தில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்குப் பரிசு

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறித்துராஜ் பரிசுகளை வழங்கினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை... மேலும் பார்க்க

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலை: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலைக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள... மேலும் பார்க்க