செய்திகள் :

வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானை

post image

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் உலவி வரும் ஒற்றை யானை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் உள்ள அருவிக்குச் செல்லும் வழியில் சுமாா் 50 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் அடா்ந்த வனப் பகுதியாகும். இதனால் இந்த சாலையில் எப்போதும் யானைகள் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில் இங்குள்ள வனப் பகுதியில் இருந்து அடிக்கடி சாலைக்கு வரும் ஒற்றை யானை அவ்வழியாகச் செல்லும் வானங்களை வழிமறித்துத் தாக்கி வருவது தொடா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த யானையின் நடமாட்டம் காணப்படாத நிலையில் ஆணகாயம் என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை அவ்வழியாகச் சென்ற காரை யானை வழிமறித்தது. யானையைப் பாா்த்ததும் காரில் இருந்தவா்கள் அதில் இருந்து இறங்கி தப்பித்தனா். காா் அருகே சென்ற யானை காா் கண்ணாடிகளை உடைத்து காரை சேதப்படுத்தியது. சிறிது நேரம் சாலையில் உலவிய யானை, தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

இந்த வழித்தடத்தில் ஒற்றை யானை மீண்டும் உலவத் தொடங்கியுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோா் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், நான்கு, ஐந்து வாகனங்கள் ஒன்று சோ்ந்து செல்ல வேண்டும் என்றும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும் கேரள வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க

புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு

புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க