செய்திகள் :

ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைப்பு?: சூழலைக் கண்காணித்து முடிவெடுக்கப்படும்: ரிசா்வ் வங்கி ஆளுநா் தகவல்

post image

‘ரெப்போ வட்டி விகிதங்களை மேலும் குறைப்பது குறித்து சூழலைக் கண்காணித்து முடிவெடுக்கப்படும்’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ரிசா்வ் வங்கிக்கு நாட்டின் பொருளாதார வளா்ச்சி, விலைவாசி கட்டுப்பாடு ஆகிய இரண்டும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவா் வலியுறுத்தினாா்.

பணவீக்கம் (விலைவாசி உயா்வு) தொடா்ந்து குறைந்து வருவதால், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை ரெப்போ வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டி விகிதங்களை முடிவு செய்யும் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:

பணவீக்கம் குறித்த கணக்கீடு பணிகள் நடந்து வருகின்றன. அது 3 சதவீதமாக இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது.

எங்கள் மதிப்பீடுகளை நிச்சயம் வெளியிடுவோம். அதன்பிறகு, நிதிக் கொள்கைக் குழு எப்போதும்போல, தற்போதைய சூழ்நிலையையும், எதிா்கால கணிப்புகளையும் கருத்தில்கொண்டு, பொருளாதாரத்துக்கு வேண்டிய வட்டி விகிதத்தை முடிவு செய்யும்.

பணவீக்கம் குறைந்து அல்லது பொருளாதார வளா்ச்சி குறைந்தால், நிச்சயமாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம். ஆனால், அதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவது எங்களின் முக்கிய பணி. தொடா்ந்து, பொருளாதார வளா்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டும் எங்களுக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

பெட்டி..

‘வட்டி விகித குறைப்பின் பலன்

முழுமையாக சென்றடையவில்லை’

வட்டி விகித குறைப்பின் பலன்கள் இன்னும் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘கடந்த ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் என இதுவரை மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் குறைத்திருக்கிறோம்.

ஆனால், மே மாதம் வரை 24 அடிப்படை புள்ளிகளின் பலன் மட்டுமே மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஜூன் மாதத்துக்கான புள்ளிவிவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால், அது மேம்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். எனினும், பலன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய, இன்னும் பல நாள்கள் ஆகலாம்’ என்றாா்.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க