செய்திகள் :

``வாக்குறுதி தந்தவர் தியேட்டரில்; மக்கள் நடுரோட்டில்'' - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு ADMK கண்டனம்

post image

தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாள்களாக, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமைதியான முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், போராட்டக்குழு தாக்கல் செய்த மனுவில் அரசுக்கு உடனடித் தீர்வை பரிந்துரைக்காத சென்னை உயர் நீதி மன்றம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரித்து, போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுமாறும், கலையாத பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்யுமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்

ஆனாலும், தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை நான்கு மணியளவில் அமைச்சர்கள் கே.என்.நேருவும், சேகர் பாபுவும் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களைக் கைதுசெய்ய ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மேலும், போக்குரவத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் காலி பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

20 நிமிடம் கூட நீடிக்காத அமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, தூய்மைப் பணியாளர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

பின்னர், இரவு 10 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வந்தார்.

அடுத்த ஒருமணிநேரத்தில் போலீஸார், தூய்மைப் பணியாளர்களைத் தாக்கியும், குறிப்பாகப் பெண்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து பேருந்தில் ஏற்றினர்.

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்

"எங்க வயித்துல அடிக்கிறீங்களே. தமிழ்நாட்டுல பொறந்த எங்களுக்கு வேலை இல்லையா? ஆந்திராகாரனுக்கு வேலை தர்றதுக்கு எதுக்கு எங்ககிட்ட ஓட்டு வாங்குன? ஆட்சி செய்ய முடியலைனா ராஜினாமா பண்ணிட்டு போங்க. இந்த ஆட்சி ஒழிக" என ஆதங்கத்துடன் பெண் தூய்மைப் பணியாளர்கள் முழங்கினார்.

சுமார் அரைமணிநேரத்தில் மொத்த போராட்டக்காரர்களையும் போலீஸார் கைதுசெய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.

கூலி திரைப்படம் பார்த்த ஸ்டாலின்
கூலி திரைப்படம் பார்த்த ஸ்டாலின்

அதேவேளையில், நேற்று முன்தினம் பாரிஸில் ``நானும் கம்யூனிஸ்ட்தான்'' என்று பெருமையுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்ட அதேநேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் `கூலி' படத்தைப் பார்த்து வாழ்த்தியிருந்தார்.

பின்னர், போராட்டம் நடந்த இடத்தில் இருந்த குப்பைகள் தூய்மைப் பணியாளர்களை வைத்தே அகற்றப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க அரசின் இத்தகைய அராஜக செயலைக் கண்டித்திருக்கும் அ.தி.மு.க, "வாக்குறுதி கொடுத்தவரோ தியேட்டரில், வாக்குறுதியை நிறைவேற்ற கூறிய மக்களோ நடுரோட்டில்.

ஜனநாயக நாட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடிய தூய்மை பணியாளர்களை காவல்துறை மூலம் அடித்து அகற்றிய சர்வாதிகாரி ஸ்டாலினின் ஆட்சி அகற்றப்படும் நாள் விரைவில்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.

``தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம்'' - எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தலைமைப் பண்பு இல்லாதவருக்கு தோல்வி நிச்சயம் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட... மேலும் பார்க்க

``இறந்தவர்களுடன் தேநீர் அருந்த வாய்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி'' - ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னேற்பாடாக, தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அந்த பணியின் போது, சுமார் 65 லட்சம்... மேலும் பார்க்க

``பணி நிரந்தரம் இல்லை; தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள்'' - ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.போராட்டக்... மேலும் பார்க்க

``79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், இப்படி அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை'' -எடப்பாடி பழனிசாமி

தூயமை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தூய்மை பணியாளர்கள் கைதுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்ற... மேலும் பார்க்க

``பெரியார் வழி ஆட்சியில், போராடும் பெண்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்'' - TVK ஆதவ் அர்ஜுனா கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் கடந்த 13 நாள்களாக அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று நள்ளிரவில் வல... மேலும் பார்க்க

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்னி அரசு கண்டனம்

நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின... மேலும் பார்க்க