செய்திகள் :

‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!

post image

அரசின் 50க்கும் மேற்பட்ட சேவைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாக பெறுவதற்கு  தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. 

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மெட்டா நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு, வருமானச் சான்றிதழ்கள், வரி செலுத்துதல், வணிக உரிமங்கள், அரசுப் பேருந்து சீட்டுக்கான முன்பதிவு போன்ற பல சேவைகளை ‘வாட்ஸ்அப்’ வழி மக்கள் பெற முடியும்.

அச்சேவைகளை வழங்குவதற்காகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘சாட்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவையை அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளது.

சேவையை பெற பல்வேறு அலுவலகங்களுக்கும் மக்கள் அலைவதை இத்திட்டம் தடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மக்கள் தங்கள் கைபேசி வாயிலாகவே அரசு சேவைகளைப் பெற முடியும். இது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசின் சேவைகளை மக்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: "குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதை தடுக்க வேண்டும்" - அன்புமணி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவான, ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில், பாமக ... மேலும் பார்க்க

"நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்"- இந்தியாவைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா!

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தினால் இந்தியா-சீனா உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.இந்தியா மீது 25% வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், ரஷ்... மேலும் பார்க்க

ஆளுநர் அதிகார விவகாரம்: "Operation Success but Patient Dead"- நீதிபதிகள், மத்திய அரசு இடையே விவாதம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்... மேலும் பார்க்க

Cm Removal Bills: ``பாகிஸ்தான், பங்களாதேஷாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா" - INDIA கூட்டணி விமர்சனம்

மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதி... மேலும் பார்க்க

Constitution (130th Amendment) Bill: "மாநில உரிமைகள் மீது பாசிச தாக்குதல்" - பினராயி விஜயன்

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகித் தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய மசோதா மக்களவையில் ... மேலும் பார்க்க

"மீடியா வழக்கமான வேலையை பார்த்துவிட்டது" - காங்கிரஸுக்கு எதிராக பேசினாரா சசி தரூர்?

பாஜக அரசு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் வகையிலான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க