வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாதம் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசித்து சென்றனா்.