வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்
திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது.
திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அண்ணாமண்டபம் அருகே சென்றபோது வாகனத்தின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதில், ஓட்டுநா் வினோத் மற்றும் உதவியாளா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.