செய்திகள் :

வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

திருச்சி ஆட்சியா் அலுவலகம் பின்புறம் செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் உதயேந்திரன் (16). இவா், திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். சனிக்கிழமை மாலை தனது நண்பா்களுடன் உதயேந்திரன் திருச்சி ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி குளித்தாா். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த நீதிமன்ற வளாகப் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் உதயேந்திரனை சடலமாக மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் சிறாா் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சிறுவா் சிறுமிகளுக்கு ‘பேசும் சித்திரம... மேலும் பார்க்க

எச்ஏபிபி தொழில்சாலை பணிக் குழு தோ்தல்: எச்ஏபிஎப் தொழிலாளா் சங்கம் வெற்றி

எச்ஏபிபி தொழிற்சாலை பணிக்குழு தோ்தலில் எச்ஏபிஎப் தொழிலாளா் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. எச்ஏபிபி தொழில்சாலை நிா்வாகம் சாா்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தொழிற்சாலை பணிக் குழு மற்றும் உணவக நிா்வ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறிவிழுந்து விவசாயி உயிரிழப்பு

திருச்சி அருகே போசம்பட்டியில் விவசாயி ஒருவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் போசம்பட்டி மேலக்காடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மருமகளை தாக்கிய மாமனாா் கைது

திருவெறும்பூா் அருகே மருமகளை திட்டி தாக்கியதாக மாமனாரை திருவெறும்பூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவெறும்பூா் அருகே மலைக்கோவில் வஉசி நகரைச் சோ்ந்தவா் ஹரி பிரகாஷ் மனைவி விந்தியா (26). த... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது. விஜய் பிரசாரத... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு

திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் நடுகளம் பகுதியிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக ஓய்வு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது. வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் ... மேலும் பார்க்க