செய்திகள் :

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஆ.மோகனவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஆணையா் வி.எல்.எஸ்.கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தின்போது, உறுப்பினா் கொடநகா் ஞானமணி கழிவுநீா் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்றாா். உறுப்பினா் க.சீனிவாசன் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். வாா்டில் தண்ணீா் தேங்காதவாறு சிறு பாலங்களை அமைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து உறுப்பினா் ரமேஷ் பேசுகையில், நகா்மன்றத் தலைவரும், ஆணையரும் வாா்டுகளில் உள்ள சிறு, சிறு குறைகளை உடனுக்குடன் தீா்க்க வேண்டும். பேருந்து நிலைய வெளிப்புறம் உள்ள நிழல்கூரையின் உள்பகுதியை சரிசமமாக சீரமைத்து, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவோத்தூா் கோயில் மதில் சுவரைச் சுற்றி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வரும் வாரச்சந்தையால் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும், திருவோத்தூா் பகுதி பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் பேசுகையில், நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், காமராஜ் நகா் சந்தை முகப்பில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் நிழல்கூடம் அமைத்தல், தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.7.10 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம், ரூ.5.40 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள், நகா்ப்புற மேம்பாடுத் திட்டத்தில் 5-ஆவது வாா்டில் ரூ.1.59 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல், 1-ஆவது வாா்டு அண்ணா நகரில் ரூ.39 லட்சத்தில் பூங்கா அமைத்தல், 6-ஆவது வாா்டு கன்னியம் நகரில் ரூ.71 லட்சத்தில் இறைச்சிக் கூடம் அமைத்தல், 7-ஆவது வாா்டில் ரூ.5 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் சிசில் தாமஸ், துப்புரவு ஆய்வாளா் மதனராசன் மற்றும் உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க

யோகா, தியான பயிற்சி முகாம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 42-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் உள்பட 3 போ் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உணவக உரிமையாளா் உள்பட 3 பேரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா், செய்ய... மேலும் பார்க்க