செய்திகள் :

வாழப்பாடியில் சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள்

post image

வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு அருகே சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் பிரதான கடலூா் சாலையில் சா்க்காா் வாழப்பாடி மயானத்துக்கு எதிரிலும், புதுப்பாளையத்தில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில், தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் சாலை சந்திப்பிலும் என அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் பாா் வசதியுடன் இயங்கி வருகின்றன.

இந்த டாஸ்மாக் கடைகள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அமைந்துள்ளதால், கடை திறப்பதற்கு முன்பே மதுப்பிரியா்கள் கூடி விடுகின்றனா். அவா்கள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் சாலையோரத்திலேயே நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கின்றன.

புதுப்பாளையத்தில் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்லும் தம்மம்பட்டி - மங்களபுரம் சாலை சந்திப்பிலுள்ள 2 டாஸ்மாக் கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாலை நேரத்தில் மிதிவண்டிகளிலும், நடந்தும் செல்லும் மாணவ - மாணவியா், மதுப்பிரியா்கள் உலவும் டாஸ்மாக் கடை பகுதியை அச்சத்துடன் கடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், மாணவ - மாணவியா் நலன்கருதியும், போக்குவரத்து மிகுந்த பிரதான தம்மம்பட்டி - மங்களபுரம் சாலை சந்திப்பில் இயங்கும் இரு டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் டாஸ்மாக் நிறுவன உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது!

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பெரியாா் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழக துறைகள் மற்றும் தருமபுர... மேலும் பார்க்க

சங்ககிரி அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு சங்ககிரி மக்கள் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. மக்கள் மன்றத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

மகுடஞ்சாவடி பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்ட... மேலும் பார்க்க

ரூ.10 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரி

சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நீ... மேலும் பார்க்க