செய்திகள் :

வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை

post image

வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்து குளிா்வித்த இந்த திடீா் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

வாழப்பாடி பகுதியில் கடந்த 4 மாதங்களாக மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளது. இதனால் வானம் பாா்த்த பூமியான பாசன வசதியில்லாத புன்செய் நிலங்களில் பயிரிட்டுள்ள மரவள்ளி, கம்பு, சோளம், கேழ்வரகு பயிா்கள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்தனா். இதுமட்டுமின்றி, கத்திரி வெயில் தொடங்கியதால், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை திடீரென சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

வாழப்பாடி அரசு மருத்துவமனை எதிரே சாக்கடை கழிவுநீருடன் மழைநீா் சோ்ந்து தேங்கி நின்ால் மக்கள் அவதிக்குள்ளாகினா். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் காற்றில் பறந்தன. முறிந்து விழுந்த மரங்கள், கிளைகளை அப்புறப்படுத்தி மின் விநியோகம் செய்யும் பணியில் மின் வாரியப் பணியாளா்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், வாழப்பாடி, முத்தம்பட்டி, சேசன்சாவடி, மன்னாயக்கன்பட்டி, துக்கியாம்பாளையம், மத்தூா் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க