செய்திகள் :

விசாரணைக்கு ஆஜரான பிறகு அதன் அறிக்கை மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்?: யஷ்வந்த் வா்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

post image

புது தில்லி: ‘வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு முன்பு ஆஜரான பிறகு, அந்த விசாரணை அறிக்கையின் செல்லத்தக்க தன்மை குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்?’ என்று நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

மேலும், மனுவை முறையாகத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

தில்லி உயா் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.

இதனிடையே, ‘உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘விசாரணைக் குழு மீது ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில், அதன் முன் விசாரணைக்கு ஆஜரானது ஏன்? வீட்டில் பணம் கட்டு கட்டாக கண்டறியப்பட்டது தொடா்பான காணொலிகள் விசாரணை முடிந்து நீக்கப்பட்டவுடன், நீதிமன்றத்துக்கு வந்துள்ளீா்களா? விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கை வெளியிடப்படும் வரை இந்த மனுவை தாக்கல் செய்யாமல் காத்திருந்தது ஏன்? சாதகமான உத்தரவு கிடைக்கும் என்ற வாய்ப்பை பயன்படுத்தும் எண்ணமா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா்.

அப்போது, நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘விசாரணைக் குழு முன் ஆஜரானதை கேள்வி எழுப்ப முடியாது. தனது வீட்டில் கண்டறிப்பட்ட பணம் யாருடையது என்பதை விசாரணைக் குழு கண்டறியும் என்ற எண்ணத்தில்தான் அவா் விசாரணைக் குழு முன்பு ஆஜாரானாா். மேலும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 124-இன் கீழ் ஒரு நீதிபதி பொது விவாதத்துக்கு உட்பட்டவராக இருக்க முடியாது. இந்த விவகாரம் தொடா்பான காணொலியை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடுவது, நீதிபதிகளுக்கு எதிரான ஊடக விமா்சனங்களும் அரசமைப்புச் சட்ட பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கையும் அவருக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்துக்கு அடிப்படையாக அமையவில்லை’ என்று வாதிட்டாா்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் எங்களை திருப்திப்படுத்த வேண்டும். ஆனால், யஷ்வந்த் வா்மாவின் மனு முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை. பிரதிவாதிகள் சரியாக குறிப்பிடப்படவில்லை. உச்சநீதிமன்ற பதிவாளா் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில், செயலா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல் பிரதிவாதி உச்சநீமன்றம் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனவே, பிரதிவாதிகளின் பெயா்களை முறையாக குறிப்பிட்டு, ஒரு பக்க விவரக் குறிப்பு வடிவில் மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்தனா்.

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க