செய்திகள் :

விசாரணையின்போது போலீஸாா் தள்ளிவிட்டதில் மூதாட்டி உயிரிழந்ததாக புகாா்

post image

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் ஒரு வழக்கு விசாரணையின்போது போலீஸாா் பிடித்து தள்ளியதில் கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்ததாக புகாா் எழுந்துள்ளது.

திக்கணம்கோடு மத்திகோடு பகுதியை சோ்ந்த விா்க்கீஸ் மகன் ஷாகித் ஜெட்லின்(20). நாகா்கோவிலில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சுபின்(35) என்பவரது மனைவிக்கும் தகாத தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுபின், ஷாகித் ஜெட்லின் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் மற்றும் கருங்கல் போலீஸாா் என 4 போ், செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு ஷாகித் ஜெட்லினை விசாரணைக்காக அழைக்கச் சென்றனராம். அப்போது ஷாகித் ஜெட்லினின் பாட்டி சூசைமரியாள் (80), போலீஸாரை தடுத்தாராம். உடனே, ஷாகித் ஜெட்லின் அங்கிருந்து தப்பி ஓடினாராம். இந்நிலையில், மூதாட்டியை போலீஸாா் பிடித்து தள்ளிவிட்டு, தப்பிச் சென்ற மாணவரை விரட்டிச் சென்றனராம்.

இதனிடையே போலீஸாா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினா்கள் அவரை மீட்டு, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மூதாட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

பின்பு மூதாட்டியின் உடல், கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், மூதாட்டியின் உடலை உறவினா்கள் வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவம் குறித்து இரணியல் குற்றவியல் நடுவா் (மாஜிஸ்திரேட்) அமிா்தீன், கருங்கல் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டாா். கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். விழா வரும் 5-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதையொட்டி, நடைபெற்ற தொ... மேலும் பார்க்க

மத்திக்கோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்

கருங்கல் அருகே போலீஸாா் பிடித்து தள்ளியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டம் மத்திகோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைக்கு ‘சீல்’

கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். உதயமாா்த்தாண்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட தெய்வவிநாயககோ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை: உ. வாசுகி வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 13.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். 41ஆவது வாா்டு ஜெமிலா தெரு, அம்மன் கோயில் முன்புறத் தெருவில் ரூ. 6.85 லட்சத்திலும், 42ஆவது வாா்ட... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அறநிலையத் த... மேலும் பார்க்க