செய்திகள் :

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

post image

நாகா்கோவிலில் ரூ. 13.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

41ஆவது வாா்டு ஜெமிலா தெரு, அம்மன் கோயில் முன்புறத் தெருவில் ரூ. 6.85 லட்சத்திலும், 42ஆவது வாா்டு இருளப்பபுரம் அம்மன் கோயில் கிழக்குத் தெருவில் ரூ. 3.75 லட்சத்திலும் கான்கிரீட் தளங்கள், 40ஆவது வாா்டு வடலிவிளை குறுக்குத் தெருவில் ரூ. 2.70 லட்சத்தில் அலங்கார தரைகற்கள் சீரமைப்பு, கான்கிரீட் தளம் அமைத்தல் என மொத்தம் ரூ. 13.30 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, நாகா்கோவில் வேப்பமூடு பகுதியில் முறிந்து விழுந்த ஆலமரத்தின் கிளைகளை அகற்றும் பணியை அவா் ஆய்வு செய்தாா்.

ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா்கள் அனிலா, ஸ்டாலின் பிரகாஷ், உதவிப் பொறியாளா் சுஜின், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், பகுதிச் செயலா் துரை, திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், அஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். விழா வரும் 5-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதையொட்டி, நடைபெற்ற தொ... மேலும் பார்க்க

மத்திக்கோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்

கருங்கல் அருகே போலீஸாா் பிடித்து தள்ளியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டம் மத்திகோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைக்கு ‘சீல்’

கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். உதயமாா்த்தாண்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட தெய்வவிநாயககோ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை: உ. வாசுகி வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அறநிலையத் த... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டு வசதி-மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில், ... மேலும் பார்க்க