செய்திகள் :

குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

post image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிா்கள் அறுவடை சாஸ்தா கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு நெற்கதிா்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து, மூலஸ்தான மண்டபத்தில் அம்மன் பாதத்தில் நெற்கதிா் படைக்கப்பட்டது. பின்னா் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அம்மனுக்கு தங்கக் கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் காட்சியளித்தாா்.

இந்த பூஜைகளை கோயில் மேல்சாந்திகள் நடத்தினா். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு நெற்கதிா்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டு, பின்னா் அந்த நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், குமரி மாவட்ட அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ராமகிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், பக்தா்கள் சங்க நிா்வாகி எஸ்.வைகுண்டபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். விழா வரும் 5-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதையொட்டி, நடைபெற்ற தொ... மேலும் பார்க்க

மத்திக்கோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்

கருங்கல் அருகே போலீஸாா் பிடித்து தள்ளியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டம் மத்திகோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைக்கு ‘சீல்’

கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். உதயமாா்த்தாண்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட தெய்வவிநாயககோ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை: உ. வாசுகி வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 13.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். 41ஆவது வாா்டு ஜெமிலா தெரு, அம்மன் கோயில் முன்புறத் தெருவில் ரூ. 6.85 லட்சத்திலும், 42ஆவது வாா்ட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டு வசதி-மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில், ... மேலும் பார்க்க