செய்திகள் :

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்

post image

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் பிரசாரம் மேற்கொள்கிறாா். திருச்சி, அரியலூா், நாகை, திருவாரூரைத் தொடா்ந்து நாமக்கல், கரூரில் சனிக்கிழமை அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா். விஜய் பிரசாரத்துக்கு காவல் துறையினா் அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்கின்றனா். கடைசிநேரத்தில் ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்கின்றனா்.

கரூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் அனுமதி கிடைத்தது. 11 கட்டுப்பாடுகளை போலீஸாா் விதிக்கின்றனா். திருவாரூா், திருச்சி போன்ற இடங்களில் பிரசாரம் நடைபெற்று இரண்டு, மூன்று வாரங்களான நிலையில் கட்சியினா் மீது தற்போது வழக்குப் பதிவு செய்கின்றனா். இவற்றையெல்லாம் கடந்து மக்கள் அலைஅலையாக விஜய் பிரசாரத்துக்கு வருகின்றனா். அனுமதி வழங்குவதில் அதிகாரிகள், திமுகவுக்கு ஒரு நிலைப்பாட்டையும், மற்ற கட்சிகளுக்கு ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள்கின்றனா் என்றாா்.

என்கே-26-டிவிகே

நாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தவெக இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்.

மொளசியில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமைக்கும் பணி

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகனமேடைக்கு பாதை அமை... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இளம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பரமத்தி வேலூா் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என ஆட்சியரிடம் இளம் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத... மேலும் பார்க்க

புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 11,072 பேருக்கு பற்று அட்டை வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 2025-26 கல்வி ஆண்டுக்கு 11,072 மாணவ, மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில் செப். 25-இல் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த ... மேலும் பார்க்க

கூட்டுறவு சிக்கன நாணய சங்க லாப பங்குத்தொகையை வழங்க ஆசிரியா்கள் கோரிக்கை

ஆசிரியா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் வரப்பெற்ற லாப பங்குத் தொகையை, உறுப்பினா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இத... மேலும் பார்க்க

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஆா்.என்.ஆக்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தோ்வாகி உள்ளனா... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 55 அரசுப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க