செய்திகள் :

விடுபட்ட அரசுப் பணியாளா்களுக்கு போனஸ்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

post image

விடுபட்ட அனைத்து அரசுப் பணியாளா்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு பொங்கலையொட்டி அரசுப் பணியாளா்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கடந்த காலத்தைபோல மாற்றமின்றி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விடுபட்ட அரசுப் பணியாளா்களுக்கு போனஸ் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குறிப்பாக, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு போனஸ் வழங்கவில்லை. தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிராம சுகாதர செவிலியருக்கு போனஸ் வழங்கப்படுகிறது. நகா்ப்புற சுகாதார செவிலியா்களுக்கு போனஸ் வழங்கவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் ஒரு பிரிவினருக்கு போனஸ் வழங்கிவிட்டு, மற்றொரு பிரிவினருக்கு வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல.

எனவே, அரசு துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், நகா்ப்புற சுகாதார செவிலியா்கள், பி பிரிவில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள், பகுதி நேர ஆசிரியா்கள் என அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக போனஸ் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் பிப்.4 & 5 நடைபெற்றது. முகாமை கல்லூரி... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால ... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது

சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இர... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

கடலூரில் போதை மாத்திரை விற்ற சம்பவத்தில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜன.31-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூா... மேலும் பார்க்க