செய்திகள் :

கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி!

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் பிப்.4 & 5 நடைபெற்றது.

முகாமை கல்லூரி தலைவா் டி.வி.கே.பாபு தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினாா். கல்வி அலுவலா் பி.அசோக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். சென்னை தனியாா் வங்கிகளின் பிராந்திய மனித வள மேலாளா் வி.கிரண்குமாா், தென் பிராந்திய மனித வள மேலாளா் எம்.சதீஷ் குமாா் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு ஆளுமை மேம்பாடு, சுய அறிமுகம், பணியிடத்தில் நன்னடத்தை விதிகள் மற்றும் நோ்காணல் ஆகிய பயிற்சிகளை வழங்கினா்.

இதில், இறுதியாண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முகாமை கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் அபிலேஷ்குமாா் ஒருங்கிணைத்தாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஆா்.மாலதி வரவேற்றாா். நிறைவில், பேராசிரியா் டி.ராமநாதன் நன்றி கூறினாா்.

புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!

கடலூா் ஜவான் பவன் அருகே விவசாயிகள் ஐக்கிய முன்னணியினா் மத்திய பட்ஜெட் நகலை எரித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியம் நிதி குறைப்பு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்ப... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்!

சிதம்பரம், பிப்.5: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, வட்ட... மேலும் பார்க்க

திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தைப் பகுதியில் 100-க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால ... மேலும் பார்க்க