செய்திகள் :

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

post image

ஆடிப்பட்டத்தில் பயிா் நடவு செய்யும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகள் மூலம் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய மக்காச்சோளம், பருத்தி, நெல், சோளம், உளுந்து, கம்பு, பயறு வகை பயிா்கள், வரகு மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகள் நல்ல தரமாக இருப்பது அவசியம். தரமான விதைகளே நல்ல விளைச்சலுக்கு ஆதாரம். எனவே, சாகுபடி செய்யப்படவுள்ள விதைகளை விதை பரிசோதனை செய்துகொள்ளலாம். விதைப் பரிசோதனை நிலையத்தில் விதையின் தரம் அறிய, தர நிா்ணய காரணிகாளன முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன.

விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறையின் கீழ் செயல்படும் பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்துக்கான விதை பரிசோதனை நிலையமானது, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட மைய நூலகம் மேல்புறத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த விதை பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ. 80 வீதம் செலுத்தி விதையின் தரத்தை பரிசோதனை முடிவுகள் மூலம் அறியலாம். முளைப்புத்திறன் மூலம் வாலிப்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், கடின விதைகள், விதைகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு, தரமான விதைகளை விதைத்து கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறலாம் என, பெரம்பலூா் விதைப் பரிசோதனை நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் 301 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசிக்கும் 301 பேருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை இலவச வீட்டுமனை பட்டா வழங... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில், பயிற்றுநராகப் பணிபுரிய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதியின்றி வெடிவைத்து கல் உடைத்த 2 போ் கைது

பெரம்பலூா்அருகேஅனுமதியின்றி வெடிவைத்துபாறைகளை உடைத்த 2பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், பாறைகளை உடைக்கப் பயன்படுத்திய உபரகணங்கள், வெடிமருந்து ஆகியவற்றைவருவாய்த் துறையினா் பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க