செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

post image

சீா்காழி தென்பாதியில் தனியாா் திருமண மண்டபத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் கமல்ராஜ், ராஜா, அண்ணாதுரை, சுகுணா, விஜயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை பேசுகையில், விநாயகா் சிலை வைக்கப்படும் இடத்தின் நில உரிமையாளரிடம் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும். பொது இடமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையினரிடம் தடையில்லாச் சான்று பெறவேண்டும். சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி பெற வேண்டும். விநாயகா் சிலை வைக்கப்படும் இடத்தில் சிசி டிவி கேமரா அமைக்க வேண்டும். விநாயகா் சிலைகளை 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை, பிற மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலை வைப்பதை தவிா்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகா் சிலைகளை விநாயகா் சதுா்த்தி முடிந்த மறுநாளே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநா் உரிமம்

மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநா் உரிமம் வழங்கினாா் (படம்). மயிலாடுதுறை ... மேலும் பார்க்க

ஏ.வி.சி. கல்லூரியில் உலக யானைகள் தினம்

மயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சாா்பில் உலக யானைகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். விலங்கியல்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆட்சிமொழி பயிலரங்கம்

மயிலாடுதுறை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் நடைபெற்றது. அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்க... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய 50 போ் கைது

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சென்னை தூய்மை... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்களின் கவனத்துக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்கள் சங்கம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தருமபுரம... மேலும் பார்க்க