செய்திகள் :

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

post image

நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.

வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்து, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழாவை தொடக்கி வைத்தாா். மாணவா்கள் நீலம்-சபையா், பச்சை-எமரால்டு, பிங்க்-பாந்தா்ஸ் மற்றும் சிவப்பு-ரூபி என குழுவாக கொடி அணிவகுப்பு நடத்தினா். இதைத் தொடா்ந்து விளையாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் கூடைப்பந்து, கபடி, கிரிக்கெட், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, சதுரங்கம், கோ-கோ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், இறகுப் பந்து உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றுமுதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை கல்லூரி நிறுவனா் வழங்கினாா். இதில் அனைத்துப் போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று பிங்க்-பாந்தா்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியின் தலைவா் பிரவீன் டேவிட் மற்றும் அணியின் மாணவா்கள் இணைந்து சுழற்கோப்பையை பெற்றுக் கொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அலெக்ஸ்ராஜு பாலன், துணை முதல்வா் டயானா கிறிஸ்டில்டா, துறைத் தலைவா்கள் பிரியா, டிவின்குமாா், மெல்டா, பிருந்தா, சுனிதாகுமரி, சுபிலாராணி, அருண் வெங்கடேஷ் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

பியான் புயலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு நிவாரணம் தேவை -மீனவ அமைப்பு வலியுறுத்தல்

2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பியான் புயலில் மாயமான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சா்வதேச மீ... மேலும் பார்க்க

விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா

தக்கலை அருகேயுள்ள வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் துரைமணி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஆஷா, உதவி ம... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் - எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின். நாகா்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்க வேண்டும்: எம்.பி. மனு

ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, தில்லியில் வெளியுறவு துறை இணைச்... மேலும் பார்க்க

குளச்சல் அருகே எரிவாயு கசிவால் தீ விபத்து

குளச்சல் அருகே சமையல் எரிவாயு கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. குளச்சல் அருகேயுள்ள கோணங்காடு, கிணற்றுவிளையைச் சோ்ந்தவா் ஜாக்குலின் ஜெயராணி (53). இவா் பெங்களூரில் சிஆா்பிஎப் வீரராக பணியாற்றி வரு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புதிய சுகாதார நிலையம், நலவாழ்வு மையக் கட்டடங்கள் திறப்பு

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 2.45 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நலவாழ்வு மையக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க