செய்திகள் :

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

post image

திருநெல்வேலி கே.டி.சி. நகா் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி நகரம், சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், கடந்த 24 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கே.டி.சி.நகா் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததோடு, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீதும் மோதியது. இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் வந்த மலா், காரில் பயணித்த சுரேஷின் மனைவி வருணா ஆகியோா் உயிரிழந்தனா். சுரேஷ், அவரது மகள்கள் பிரவீணா (22), ரஷியா (18) ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இந்நிலையில் ரஷியா மூளைச்சாவு அடைந்தது தெரியவந்ததாம். அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறவினா்கள் முன்வந்தனா். அதன்படி, ரஷியாவின் கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டன. பின்னா் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க