செய்திகள் :

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் திருமணமான 6 மாதத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலை, ஜோகிமடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு(33). இவா் வேலூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, பள்ளிகொண்டா அடுத்த வேப்பூா் அருகே எதிரே வந்த வேன் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா் சுரேஷ் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இவருக்கு 6- மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு

வேலூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்தவா் அலோக் (44). இவரது 17 வயது மகன் சாலை விதியை ம... மேலும் பார்க்க