செய்திகள் :

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

post image

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56813) பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து திருவாரூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் (எண் 56808) ஆலப்பாக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. மறுமாா்க்கத்தில் திருவாரூா் நிலையத்திலிருந்து ஆலப்பாக்கம் வரை ரயில் இயக்கப்பட்டது.

மைசூரிலிருந்து கடந்த 7- ஆம் தேதி மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்ற மைசூா் கடலூா் துறைமுக விரைவு ரயில் (16232) செவ்வாய்க்கிழமை காலை புதுச்சத்திரத்திலேயே நிறுத்தப்பட்டது.

தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.35 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் (எண் 06190) சிதம்பரத்திலேயே நிறுத்தப்பட்டது.

ஆலம்பாக்கம் ரயில் விபத்து மீட்பு பணிகள் முடிந்த பிறகு சிதம்பரத்திலிருந்து ரயில், தாம்பரத்துக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின. பொது வேலைநிறுத்தத்... மேலும் பார்க்க

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கோடம்பாக்... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க